சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தடகள போட்டி : தொண்டி இளைஞர் சாதனை

ராமநாதபுரம் : லண்டனில் நடந்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தடகள போட்டியில் தொண்டியை சேர்ந்து இளைஞர்; ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரண்டாமிடம் பெற்றுத் தந்தார். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்தவர் மனோகரன்(26). மாற்றுத் திறனாளியான இவர், அழகப்பா பல்கலை மாலைநேரக்கல்லூரியில் எம்.காம்., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயது முதலே, ஈட்டி எறிதல் போட்டியில் ஆர்வம் கொண்டிருந்தார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ஜொலித்த மனோகரனுக்கு, லண்டனில் செப்., 18, 19ல் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பணப்பிரச்னை காரணமாக, இதில் பங்கேற்க முடியாமல் தவித்த மனோகரனுக்கு, மாவட்டத்தில் சிலர் உதவினர். இதைத்தொடர்ந்து லண்டன் சென்ற மனோகரன், அங்கு நடந்த போட்டியில் திறமையை காட்டி அசத்தினார். இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை பெற்றுத்தந்தார். வெற்றியுடன் தாயகம் திரும்பிய மனோகரனுக்கு, நேற்று மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கலெக்டர் ஹரிஹரன் உட்பட அதிகாரிகள் அவரை பாராட்டினர்.  

 

0 comments: