நாளை எம்.பி.ஏ., மற்றும் பி.எட்., நுழைவுத்தேர்வு

மதுரை: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலையில்(இக்னோ) ஜனவரி 2011 பருவ சேர்க்கைக்கான எம்.பி.ஏ., மற்றும் பி.எட்., படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு தேசிய அளவில் நாளை நடக்கிறது. காலை 10 முதல் 1 மணி வரை எம்.பி.ஏ.,வுக்கும், மதியம் 2 முதல் மாலை 4 மணி வரை பி.எட்.,கும் தேர்வு நடக்கிறது. மதுரை மண்டலத்தில் 10 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தகுதியுடைய மாணவர்களுக்கு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. கிடைக்கப் பெறாதவர்கள் "இக்னோ' இணையதளத்தில் (www.ignou.ac.in) இருந்து அச்சு எடுத்துக் கொள்ளலாம். தேர்விற்கு 45 நிமிடங்கள் முன்னதாக நுழைவுச்சீட்டுடன் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டும் என, மண்டல இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

 

0 comments: