சென்னை பேராசிரியைக்கு டில்லியில் விருது

புதுடில்லி : டில்லியில் நடைபெற்ற விழாவில் சென்னையை சேர்ந்த கல்லூரி பேராசிரியைக்கு ராஷ்டிரிய வித்ய சரஸ்வதி புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. நிர்வாக படிப்புக்கான சர்வதேச மையம் சார்பில் டில்லியில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கல்வியை நாடு முழுவதும் பரப்பிட விடாமுயற்சியுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முக்கிய கல்வியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. சென்னை திருநின்றவூரில் உள்ள ஜெயா பொறியியல் கல்லூரியின் இயக்குனர் லதா கிருஷ்ணதாஸ் மஜும்தார். அக்கல்லூரியின் மேலாண்மை கல்வி துறையில் பேராசிரியராகவும் உள்ளார். இவருக்கு டில்லியில் உள்ள "ராஷ்டிரிய வித்ய சரஸ்வதி புரஸ்கார்' விருது வழங்கப்பட்டது. அதோடு பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்மநாராயண் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

0 comments: