ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.கட்டட ஆலோசகர்: இப்பணியிடத்திற்கு கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவில் உதவி செயற்பொறியாளர் (ஏ.இ.,) பணியில் இருந்து ஓய்வு பெற்றோர் விண்ணப்பிக்கலாம். பணியிடம் 3. இவர்களுக்கு தொகுப்பூதியமாக 12 ஆயிரம் ரூபாய் சம்பளம். உதவியாளர் மற்றும் கணக்காளர்: இப்பணிக்கு பி.காம்., மற்றும் பிற பட்டதாரிகள், கம்ப்யூட்டரில் டேலி பெற்றிருக்க வேண்டும். மொத்த பணியிடங்கள் 4. தொகுப்பூதியமாக மாதம் 7500 ரூபாய் வழங்கப்படும். கம்ப்யூட்டர் தகவல் பதிவாளர்: கம்ப்யூட்டர் கல்வியுடன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு, மேல்நிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணியிடங்கள் 3. தொகுப்பூதியமாக மாதம் 6000 ரூபாய் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் சுயவிலாசம் எழுதிய தபால் அட்டையை இணைத்து விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை, " மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், அனைவருக்கும் இடைநிலை கல்வி, முதன்மை கல்வி அலுவலகம், தல்லாகுளம், மதுரை-2' க்கு விண்ணப்பங்களை செப்., 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இத்தகவலை முதன்மை கல்வி அலுவலர் கு.ரஜனிரத்தினமாலா தெரிவித்துள்ளார்.

 

0 comments: