அக்.7-ல் ராணுவப் பணிக்கு ஆள் சேர்ப்பு முகாம்

ஈரோடு, செப். 28: ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவதற்குத் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான முகாம், திண்டுக்கல்லில் அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.


 இது குறித்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பெ.குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுóள்ள செய்திக் குறிப்பு: ராணுவ சோல்ஜர் டிரேட்ஸ்மென், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டண்ட், சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணியிடங்களுக்கான ஆள் தேர்வு நடக்கிறது.
 திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
 17 வயதுக்கு மேல் 21 வயது வரை உள்ள உரிய கல்வித் தகுதியுடையவர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம். 18 வயதுக்குக் குறைவான விண்ணப்பதாரர்கள் அவர்களது பெற்றோரிடம் உறுதிமொழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பல்வேறு நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படும். மருத்துவத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

 

0 comments: