காந்திஜி தங்கியிருந்த மணி பவனுக்கு ஒபாமா வருகை

மும்பை : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தருகிறார். அப்போது, அவர் காந்திஜி தங்கியிருந்த மணி பவனுக்கு சென்று பார்வையிட உள்ளார்.

பள்ளி மாணவர்களுடன் கடந்த ஆண்டு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துகொண்டார். அப்போது, லில்லி என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒபாமாவிடம், ""உங்களுக்கு, ஒரு முக்கியமான நபருடன் விருந்துண்ண வாய்ப்பு அளித்தால், யாரை தேர்ந்தெடுப்பீர்கள்? அவர் வாழ்ந்துக்கொண்டிருப்பவராகவோ, அல்லது மறைந்துவிட்டவராகவோ கூட இருக்கலாம் '' என்றாள். அதற்கு பதிலளித்த ஒபாமா, நான் மகாத்மா காந்தியைத்தான் தேர்ந்தெடுப்பேன். ஏனென்றால், அவர் என்னுடைய நிஜ ஹீரோவாக திகழ்கிறார் '' என்று கூறினார்.

ஒபாமா, வரும் நவம்பர் மாதம் இந்தியா வரும்போது, காந்திஜி தங்கியிருந்த மணி பவனுக்குச் சென்று பார்வையிட உள்ளார். சுதந்திரப் போராட்டத்தின் போது, காந்திஜி தங்கியிருந்த இந்த மணிபவனில், ஒபாமாவின் மற்றொரு ரோல் மாடலான மார்ட்டின் லூதர் கிங்கும் 2 நாட்கள் தங்கியிருந்திருக்கிறார்.

 

0 comments: