பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங்

சென்னை : தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங், திருத்தப்பட்ட அட்டவணைப்படி நாளை நடக்கிறது. மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் ஷீலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வரும் 29ம் தேதி(நாளை) திருத்தப்பட்ட அட்டவணைப்படி, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் நடைபெறும். மேலும் விவரங்களை,www.tnhealth.org,www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 8 மணிக்கு, பி.சி., - எம்.பி.சி., மாணவர்களில் ஜி.ஆர்., 13,001 முதல் 13,243 ரேங்க் பெற்றவர்களும், காலை 9 மணிக்கு, பி.சி., - எம்.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., - எஸ்.சி.ஏ., மாணவர்களில் ஜி.ஆர்., 13,224 முதல் 14,000 ரேங்க் பெற்றவர்களும், மதியம் 12 மணிக்கு பி.சி., - எம்.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., - எஸ்.சி.ஏ., மாணவர்களில் ஜி.ஆர்., 14,001 முதல் 17,610 ரேங்க் பெற்றவர்களும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

 

0 comments: