பிளஸ் 2 தனித்தேர்வு துவங்கியது


சென்னை : பிளஸ் 2 மற்றும் மெட்ரிக் தனித்தேர்வுகள் நேற்று துவங்கின. வரும் அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெறும் பிளஸ் 2 தனித்தேர்வை, 37 ஆயிரத்து 297 பேர் எழுதுகின்றனர். இதே தேதியில் முடியும் மெட்ரிக் தேர்வை 3,649 மாணவர்களும், நாளை முதல் அக்டோபர் 1 வரை நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி., தனித்தேர்வை 75 ஆயிரத்து 124 மாணவர்களும் எழுதுகின்றனர். மூன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் நேரடி தனித்தேர்வர்களாக பங்கேற்கும் மாணவர்கள், இத்தேர்வை எழுதுகின்றனர். இதன் முடிவுகள், நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

 

0 comments: