கல்வித் தகவலின் கல்விச் சேவையில் பங்கேற்க அன்புடன் வரவேற்கிறோம்!

அன்புடையீர் வணக்கம்!
ல்விப் பணி என்பதைவிட கல்வி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் மாணவர்களின் நன்மைக்காகவும், பொது அறிவு வளர்ச்சிக்காகவும் கடந்த 6 மாதங்களாக எங்களது கல்வித் தகவல் வலைப்பூவை நடத்தி வருகிறோம். இதற்கு தனிமடல் மூலமாகவும் குழுமங்களின் நண்பர்கள் மூலமாகவும், வலைப்பூ வாசகர்கள் வாயிலாகவும் கிடைத்து வரும் பாராட்டுக்களும், விமர்சனங்களும் எங்கள் பணியை மேலும் உற்சாகத்துடன் செம்மைப் படுத்தவும், மேம்படுத்தவும் ஊக்கம் வழங்கி வருகிறது. அதன் மேம்பட்ட ஒரு முயற்சியாக வாசகர்கள், கல்வித்துறை வல்லுநர்கள், சான்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரது கருத்துக் கட்டுரைகளையும் நமது கல்வித் தகவலில் பதிவு செய்திட விழைகின்றோம். அவ்வகையில் கல்வி, பொது அறிவு, சமுதாய முன்னேற்றம், தன்னம்பிக்கை, சாதனை மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை தொடர்பான கட்டுரைகளை அனைவரும் editordeva@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். தங்களது பெயர் மற்றும் புகைப்படத்துடன் பதிவு செய்திட விழைகிறோம்.

" என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற அன்னை தெரசாவின் வாக்கு போல கல்வி அறிவை, செய்திகளை நாம் கொடுக்க முயலும்போது சமுதாயத்திற்கான சிறுசேவையில் நாமும் பங்கு பெறுகிறோம் என்பது திண்ணம்.

கல்வித் தகவலின் கல்விச் சேவையில் பங்கேற்க அன்புடன் வரவேற்கிறோம்!

என்றும் அன்புடன்...
S.Devarajan. & Nagai.S.Balamurali.

 

2 comments:

அமைதி அப்பா said...

உங்களுடைய இந்த சேவை மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்களும் ஆதரவும்
தொடரும்.

Nagai.S.Balamurali. said...

மிக்க நன்றி!