"காமராஜரின் தியாகங்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கும்'

உடுமலை, ஜூலை 30: காமராஜரின் தியாகங்கள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என காங்கயம் எம்எல்ஏ விடியல் சேகர் கூறினார்.


÷காமராஜர் சிலை பராமரிப்புக் குழு சார்பில் காமராஜரின் பிறந்த நாள் விழா உடுமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. காமராஜர் சிலை பராமரிப்புக் குழு தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உடுமலை வெ.வித்யாசாகர் தலைமை வகித்துப் பேசினார். நிர்வாகிகள் கே.என்.வெங்கடேசன், டி.ரத்தினவேல், கே.சுந்தரராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

÷விழாவில் கலந்து கொண்டு காங்கயம் எம்எல்ஏ விடியல் சேகர் பேசியது:

÷காமராஜரின் தியாகம் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். அவரின் தியாகங் களை வருங்கால சந்ததிகளுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் சொல்லித் தர வேண்டு ம். தனக்கென எந்த சொத்தையும் சேர்த்துக் கொள்ளாதவர், தமிழகத்தில் மூவாயிரம் பள்ளிகளுக்கு மேல் உருவாக்கியவர், மதிய உணவு, சீருடைத் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தவர். குறிப்பாக கல்வியில் புரட்சி செய்தவர் காமராஜர். இந்தியாவில் பிரதமர்களை உருவாக்கிய அவருக்கு எந்தத் தலைவரும் ஈடு இணை இல்லை என்றார்.

÷சிறப்பு விருந்தினராக பங்கேற்று சோ.சத்தியசீலன் பேசியது: காமராஜரின் வாழ்க்கையை பின்பற்றினாலே ஒவ்வொரு மனிதனும் சிகரத்தை அடையலாம். சமுதாயத்தில் மக்களுக்காக என்ன தேவை என்பதை வாழ்நாள் முழுவதும் சிந்தித்த மாமனிதர். காமராஜரின் வரலாற்றை அச்சிட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இந்தியாவில் காமராஜரைப் போல் ஒரு மனிதர் இன்னமும் பிறக்கவில்லை என்றார்.

÷தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் யுகேபி முத்துக்குமாரசாமி மற்றும் உடு மலை வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், சார்பு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

0 comments: