இளைஞர்களுக்கு குறுகிய கால தொழிற்பயிற்சி தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்குஅழைப்பு

திருப்பூர்:இளைஞர்களுக்கு குறுகிய கால தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டத்தில் பங்கேற்க, தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.கலெக்டர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:மகளிர் மேம்பாட்டு திட்டம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகிய கால தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது. எலக்ட்ரிக்கல், பிளம்பிங், கார்பெண்டரி, பேப்ரிக்கேசன், பெயின்டிங் துறைகளில் குறுகிய கால பயிற்சி அளிக்க, உரிய அங்கீகாரம் பெறப்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள், திட்ட அலுவலர், திட்ட செயலாக்க அலகு (மகளிர் திட்டம்), கலெக்டர் அலுவலக வளாகம், காமராஜ் ரோடு, திருப்பூர் என்ற முகவரிக்கு ஆக., 13க்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

0 comments: