பாபநாசத்தி இட்லி மாவு வாங்கினால்சட்னி இலவசம்

பாபநாசம்: பாபநாசத்தில் இட்லி மாவு வாங்கினால் சட்னி இலவசமாக வழங்கப்படுகிறது.ஆடி மாதம் வந்தால் ஜவுளி, நகை, பாத்திரக்கடைகளில் தள்ளுபடி என்று அறிவித்து மக்களை தங்கள் கடைக்கு தள்ளிக்கொண்டு போய் பணத்தை அள்ளும் காலம் தற்சமயம் பட இடங்களிலும் நடந்து வருகிறது. ஆனால், இட்லி மாவு வாங்கினால் சட்னி இலவசம் என்பதை கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் உழவர் சந்தை அருகே இட்லி மாவு விற்பனை செய்பவர் சேதுராமன் (66). இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர். இவர் கடந்த ஓராண்டாக இட்லி மாவு விற்பனை செய்து வருகிறார். இவர் வியாபார போட்டியை சமாளிக்க ஆடி மாதத்தில் இவரிடம் வாங்கும் இட்லி மாவு பாக்கெட்டுடன் ஒரு பாக்கெட் தக்காளி சட்னி இலவசம் என்று அறிவித்துள்ளார். எந்திர உலகத்தில் அனைத்தும் ரெடிமேடாக கிடைப்பதால் இப்போது சட்னி அரைக்கும் வேலையும் மிச்சம் என்று பலரும் போட்டி போட்டுக் கொண்டு இட்லி மாவு வாங்கி வருன்றனர்.

 

0 comments: