ரோவர் கல்லூரியில் பேரவைத் தொடக்கம்
பெரம்பலூர், ஜூலை 30: பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினிப் பயன்பாட்டியல் துறை சார்பில், பேரவைத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் பி.எஸ். ஜோசப் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் இரா. சுவநாமிநாதன், துணை முதல்வர் டி. லீமா பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரவையைத் தொடக்கிவைத்த திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி எம்.சி.ஏ. துறை இயக்குநர் ஜார்ஜ் அமரத்தினம், கணினித் துறையில் தற்போது ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப மாற்றங்கள், வேலைவாய்ப்புகள், படித்து முடித்தவுடன் வேலையில் சேர்வதற்கான தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளுதலின் அவசியம் குறித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கணினித் துறைத் தலைவர் ஜி. ரவி, அலுவலக மேலாளர் ஆர். ஆனந்தன், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவி ஜாஸ்பர்கிங் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
முன்னதாக, மாணவி கோகிலா வரவேற்றார். மாணவர் கனி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment