கல்லூரியில் விமான பொறியியல் பயிற்சி தொடக்க விழா

செங்கல்பட்டு, ஜூலை 30: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் விமான பொறியியல் பயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.


இப்பயிற்சி இக்கல்லூரியில் முதல்முதலாக தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, இக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சீனிவாசன் தலைமை தாங்கினார்.

தென்னிந்தியப் பிரிவு ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் சொசைட்டித் தலைவர் ஆசிட் கே.பர்மா, சாயின்டியா ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் சொசைட்டி அமைப்பை கல்லூரியில் குத்துவிளக்கிகேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

விமான பொறியியல் படிப்பினால் ஏற்படக்கூடிய அனுபவம், பயன், தன்னார்வத் திறமையை வளர்த்துக் கொள்ளும் திறன் குறித்து மாணவர்களுக்கு கருத்துகள் வழங்கப்பட்டன.  

கல்லூரி முதல்வர் பொன்ராஜ், நிறுவன பிராந்திய பொது மேலாளர் ராஜேஷ்குமார், சாயின்டியா விற்பனை மேலாளர் சேஷாத்ரி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

விமான பொறியியல் பிரிவு ஹெச்ஓடி சரவணன் வரவேற்று பேசினார்.

 

0 comments: