மீனாட்சி ராமசாமி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

ஜயங்கொண்டம், ஜூலை 31: அரியலுர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க  விழா அண்மையில் நடைபெற்றது.

    தொடக்க விழாவுக்கு, மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர்  எம்.ஆர். ராகுநாதன் தலைமை வகித்தார்.

    இயக்குநர் ஆர். ராஜமாணிக்கம், எம்.ஆர். கல்வியல் கல்லூரி முதல்வர் எல்.  வரதராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.   முன்னதாக, எம்.ஆர். ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பி. ராமராஜ்   வரவேற்றார். முதல்வர் ஆர். நீலாயதட்சி நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை இரண்டாம் ஆண்டு ஆசிரியரி பயிற்சி நிறுவன மாணவ,  மாணவிகள் செய்திருந்தனர்

 

0 comments: