பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு கேல் ரத்னா விருது
புதுதில்லி, ஜூலை 30- பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு (20) விளையாட்டுத் துறையின் மிக உயர்ந்த விருதான ராஜிவ் காந்தி "கேல் ரத்னா" விருது வழங்கப்படுகிறது.
இத்தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
"இந்த அறிவிப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மேலும் கடுமையாக முயற்சி செய்வேன்" என்று சாய்னா கருத்து தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 29ம் தேதி தில்லியில் நடைபெறும் தேசிய விளையாட்டு நாள் நிகழ்ச்சியின்போது அவருக்கு இந்த விருது வழங்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment