தமிழ்நூல்களுக்கு பரிசுத் திட்டம்

சென்னை : சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் நூல்களுக்குப் பரிசுகள் வழங்க, ஜ.ராமமூர்த்தி நினைவு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.ராமகிருஷ்ணா மடத்து அண்ணா நூல்களை படித்துத் தெளிவுப் பெற்று அமரரானவர் ஜ.ராமமூர்த்தி, ஆன்மிகம், இலக்கியம் ஆகிய துறைகளில், சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்குப் பரிசுகள் வழங்க எண்ணம் கொண்டிருந்தார்.தற்போது, 2009ம் ஆண்டு வெளியான சிறந்த ஆன்மிகம், இலக்கியம் ஆகிய துறைகளில் வெளியான நூல்களுக்கு ஒவ்வொரு துறையிலும் பரிசுகள் வழங்குவதற்கு ஆக.5ம் தேதி வரை ஒரு பிரதி நூலை அனுப்பலாம் என ஜ.ராமமூர்த்தி அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி: செயலர், "பவித்ரம்' தொண்டு நிறுவனம், 4, ஜெ.டி.துரைராஜ் நகர், எம்.எம்.டி.ஏ. காலனி, சென்னை-29.

 

0 comments: