ரோவர் வேளாண் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

பெரம்பலூர், ஜூலை 30: பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூரில் உள்ள ரோவர் வேளாண்மை கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


   தொடக்க விழாவுக்கு, தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி. ஜான் அசோக், வேளாண்  கல்லூரி டீன் ஜி. ஜேம்ஸ் பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் பி. சுப்பையா பேசியது:

    அறிமுக விழா என்பது, நமக்குள் உள்ள நட்பையும், குடும்ப உணர்வையும் ஏற்படுத்த வேண்டும். கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்லூரி வாழ்க்கையை பயன்படுத்தி சாதனையாளராக வர வேண்டும் என்றார் அவர்.

   இதில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் டி.ராஜு மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, பேராசிரியர் சவிதா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் வி.எம். சீனிவாசன் நன்றி கூறினார்.

 

0 comments: