நாமக்கல்லில் தேசிய புத்தகத் திருவிழா துவக்கம்

நாமக்கல், ஜூலை 30: நாமக்கல்லில் 26-வது தேசிய புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை துவங்கியது.


÷மத்திய அரசு நிறுவனமான நேஷனல் புக் டிரஸ்ட், நியு செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியவை இணைந்து நாமக்கல் குளக்கரைத் திடலில் இந்த கண்காட்சி திருவிழாவை நடத்துகின்றன. போரற்ற உலகையும், பேதங்களற்ற சமுதாயத்தையும், அறிவியல் கண்ணோட்டத்தையும் உருவாக்க உதவும் நூல்களை மக்களிடம் பரப்பும் வகையில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

÷இக் கண்காட்சியில் 10 ஆயிரம் தலைப்புகளில் 20 லட்சம் மதிப்புள்ள தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

குழந்தை நூல்கள், அறிவியல் நூல்கள், மருத்துவம், தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், இலக்கியம், திறனாய்வு நூல்கள், வரலாறு, கதைகள், கட்டுரைகள், நாடகம், வாழ்க்கை வரலாறு, சட்ட நூல்கள், வேளாண்மை என பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. உலகத் தலைவர்கள், தேசியத் தலைவர்கள், விடுதலைப் போராட்டம், பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோரது படைப்புகளும், வாழ்க்கை வரலாறும் இடம்பெற்றுள்ள புத்தகங்களும் உள்ளன.

÷இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடந்தது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சகாயம் கண்காட்சியை திறந்து வைத்தார். நியு செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் அ. கணேசன், மேலாளர் எஸ். குணசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகங்களுக்கு 10 சத தள்ளுபடியும், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது. 2 மாதங்ளுக்கு இக் கண்காட்சி திருவிழா நடைபெறும்.

மாணவர் மன்ற துவக்க விழா

ராசிபுரம்,ஜூலை 30: ராசிபுரம் பாவை காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியில்  மின்னணுவியல் மற்றும் தொடர்பியில் துறை சார்பில் 2010-11ம் ஆண்டிற்கான மாணவர் மன்ற துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

  பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் நிர்வாகம். திரு. கே.கே. இராமசாமி தலைமை வகித்தார். பாவை காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் வி.முரளிபாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

 மாணவர் டி.எல்.கெüதம வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சேலம் அரசுப் பொறியியல் கல்லூரியின் துறைத் தலைவர் ஆர்.எஸ்.டி. வகிதாபானு பங்கேற்று குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்

தார்.

 

0 comments: