தலைமை ஆசிரியர்களாக 273 பேர் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை : அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக 273 பேர் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சிலிங், சென்னை சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தலைமையில் நடந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க, பணி மூப்பு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். காலையில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில் 143 பேருக்கும், பிற்பகலில் நடந்த உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில் 130 பேருக்கும் பதவி உயர்வு ஆணைகளை இயக்குனர் பெருமாள்சாமி வழங்கினார். மேலும், 87 பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

 

0 comments: