அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி: அமைச்சர் பூங்கோதை

கோவை, ஆக.30: தமிழகத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளும் ஆரம்பக் கல்வி பெறுகின்றன என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை கூறினார்.
தென்னிந்திய அளவிலான காருண்யா இவாஞ்சலின் நினைவு கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ் விழாவிற்கு தலைமை வகித்து, அமைச்சர் பூங்கோதை போட்டிகளை துவக்கி வைத்தார். விழாவில் அவர் மேலும் பேசியது:
நாட்டில் கல்வி வளர்ச்சி ஏற்பட மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி மேம்பாட்டுக்காக ரூ.11 ஆயிரம் கோடியை ஆண்டுதோறும் தமிழக அரசு ஒதுக்கி வருகிறது. இது தமிழக மொத்த பட்ஜெட்டில் 19 சதவீதம். இதன் மூலம் தமிழகத்தில் அனைத்து குழந்தைகளுமே ஆரம்ப கல்வியைப் பெறுகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றார்

 

0 comments: