சென்னை பல்கலைக் கழகத்தின் பயிற்சி மையம் தொடக்கம்



காஞ்சிபுரம்,   காஞ்சிபுரத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் பயிற்சி மையம் அண்ணாமலை பவுண்டேஷன் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.
÷இது குறித்து அண்ணாமலை பவுண்டேஷன் அறக்கட்டளை தலைவர் சி.வி.எம்.அ.சேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
÷காஞ்சிபுரம் நகரில் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையத்தின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையம் காஞ்சிபுரம் அண்ணாமலையார் பவுண்டேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் படிக்கும் மாணவர்களின் வசதிக்காக இப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. சான்றிதழ் படிப்புகள், பட்டயப் படிப்புகள், எம்.பி.ஏ. படிப்புகள், எம்.சி.ஏ. படிப்புகள் நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை போன்ற படிப்புகளும், எம்.எஸ்.ஸி. தகவல் தொழில்நுட்பம், நூலக தகவல் அறிவியல் போன்ற சிறப்பு வேலைவாய்ப்பு படிப்புகளும் இப் பயிற்சி மையத்தின் மூலம் செயல்படுகிறது. இப் பயிற்சி மையத்தின் செயலராக எஸ்.சதீஷ்குமார் செயல்படுவார் என்றார்.

 

0 comments: