திண்டுக்கல்லில் செப்டம்பர் 4, 5-ல் மாநில அளவிலான பூப்பந்தாட்டம்

திண்டுக்கல், ஆக. 25: மாநில அளவிலான ஐவர் பூப்பந்தாட்டப் போட்டி வரும் செப்டம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.


போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு கோபாலகிருஷ்ண நாயுடு நினைவு சுழற்கோப்பை மற்றும்  10 ஆயிரம் ரொக்கம், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு  8 ஆயிரம் ரொக்கம், மூன்றாம் இடம் பெறும் அணிக்கு  6 ஆயிரம் ரொக்கம், நான்காம் இடம் பெறும் அணிக்கு  4 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட உள்ளது.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தங்குமிடம் மற்றும் உணவு வசதி இலவசமாக செய்து தரப்படும்.
பங்கேற்க விரும்பும் அணிகள் தங்களது பதிவினை வரும் செப்டம்பர் 2ம் தேதிக்குள் செயலர், திண்டுக்கல் மாவட்ட பூப்பந்தாட்டக் கழகம், ஏ.ஆர். மருத்துவமனை, தாடிக்கொம்பு- 624 709, திண்டுக்கல் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட பூப்பந்தாட்டக் கழகச் செயலர் டாக்டர் ஏ.சீனிவாசன் செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்

 

0 comments: