குறுந்தகவல் மூலம் கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு விவரங்கள்
திருவண்ணாமலை, ஆக. 26: மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஒதுக்கீடு குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்படும் என எல்காட் மேலாண்மை இயக்குநர் சந்தோஷ்பாபு கூறினார்.
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில் வெப் இன்டலிஜென்ஸ் எனும் தேசிய பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. இதனைத் தொடங்கி வைத்து சந்தோஷ்பாபு பேசியதாவது:
பொறியாளராகத் தேர்ச்சி பெறும் ஒவ்வொருவரும் சமூக சிந்தனையுடன் கூடியவர்களாகத் தயாராக வேண்டும். நமது நாடு சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகியும் 30 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்கள் வறுமையைப் போக்குவதற்குத்தான் தமிழக அரசு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சி அடித்தட்டு மக்களையும் சென்றடைய இ-கவர்னன்ஸ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
செல்போன் மூலம் தகவல்: பிற்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவியருக்கு அரசால் அளிக்கப்படும் கல்வி உதவித் தொகை ஒதுக்கீடு குறித்த விவரம் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும்.
இதற்காக 30 மாவட்ட நிர்வாகங்கள் ஒத்துழைப்புடன் 1,500 கல்லூரிகளைச் சேர்ந்த 3 லட்சம் மாணவ, மாணவியரின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி உதவித் தொகை வழங்குவதில் வெளிப்படையான நடைமுறை பின்பற்றப்படும்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment