"சிறந்த சிந்தனைகளே வாழ்வில் வெற்றியைத் தரும்'



கோவை, : சிறந்த சிந்தனைகளே வாழ்க்கையில் வெற்றியைத் தரும் என்றார் பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா.
 கோவைப்புதூரில் உள்ள விஎல்பி பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் ஊக்குவித்தல் நிகழ்ச்சியில் "வியப்பது வீழ்ச்சி' என்ற தலைப்பில் அவர் பேசியது:
 உண்மையான நட்சத்திரங்களைப் போன்றவர்கள் மாணவர்கள் தான். திரை நட்சத்திரங்களைக் கண்டு வியப்படையத் தேவையில்லை.  மற்றவர்களைப் புகழ்வதும், அவர்களைக் கண்டு வியப்பதும் ஒருவரின் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடுகிறது. சிறந்த சிந்தனைகளே வாழ்க்கையில் வெற்றியைத் தரும் என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
 தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் அணுகி தீர்வு காண வேண்டும். விடா முயற்சியும், நல்லெண்ணங்களும் இருந்தால் மாணவர்கள் சிகரத்தைத் தொட்டுவிடலாம் என்றார்.
 கல்லூரி ஆலோசகர் எஸ்.சுப்பிரமணியன், முதல்வர் வி.செüந்திரராஜன், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி முதல்வர் எஸ்.சுப்பிரமணியன், வில்பி பொறியியல் கல்லூரியின் அறிவியல் மற்றும் மனிதவளத் துறைத் தலைவர் எஸ்.பழனியம்மாள் உள்ளிட்டோர் பேசினர்.

 

0 comments: