முன்னாள் படைவீரர் எழுத்தர் பணிக்கு ஆக. 30ல் நேர்முகத் தேர்வு
கோவை, ஆக. 24: கோவை முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு எழுத்தர் பணியிடத்திற்கு முன்னாள் படைவீரரை நியமிக்க நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.
இது குறித்து முன்னாள் படைவீரர் அலுவலக பணியாளர் அதிகாரி பி.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இவ்வலுவலகத்தில் (நிலப்படை) ஒரு டேட்டா என்ட்ரி மற்றும் எழுத்தர் பணியிடம் காலியாக உள்ளது. மாத ஊதியமாக | 7,500 வழங்கப்படும்.
இப்பணிக்கு ஆகஸ்ட் 30ம் தேதி காலை 10.30 மணிக்கு இந்த அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில், கணினியில் அனுபவமுள்ள முன்னாள் படைவீரர்கள் பங்கேற்கலாம். கல்வித் தகுதி, முன் அனுபவம் குறித்த ஆவணங்களை நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment