முன்னாள் படைவீரர் எழுத்தர் பணிக்கு ஆக. 30ல் நேர்முகத் தேர்வு

கோவை, ஆக. 24: கோவை முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு எழுத்தர் பணியிடத்திற்கு முன்னாள் படைவீரரை நியமிக்க நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

 இது குறித்து முன்னாள் படைவீரர் அலுவலக பணியாளர் அதிகாரி பி.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
 இவ்வலுவலகத்தில் (நிலப்படை) ஒரு டேட்டா என்ட்ரி மற்றும் எழுத்தர் பணியிடம் காலியாக உள்ளது. மாத ஊதியமாக | 7,500 வழங்கப்படும்.
இப்பணிக்கு ஆகஸ்ட் 30ம் தேதி காலை 10.30 மணிக்கு இந்த அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில், கணினியில் அனுபவமுள்ள முன்னாள் படைவீரர்கள் பங்கேற்கலாம். கல்வித் தகுதி, முன் அனுபவம் குறித்த ஆவணங்களை நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும் என்றார்

 

0 comments: