அன்னை தெரசா நாணயம் வெளியீடு
புதுதில்லி, ஆக.28- அன்னை தெரசாவின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி அவரது உருவம் பொறித்த நாணயம் இன்று வெளியிடப்பட்டது.
தில்லியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், அவரது உருவம் கொண்ட 5 ரூபாய் நாணயத்தை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பிரதீபா பாட்டீல் பேசுகையில், "அன்னை என்கிற வார்த்தைக்கு முழுமையான மற்றும் உண்மையான அர்த்தமாக விளங்கியவர் தெரசா. கடவுள் எல்லா இடத்திலும் நேரடியாக வரமுடியாது என்பதால் தான் தெரசா போன்றோரை படைத்துள்ளார்." என்றார்.
அன்னை தெரசா கொல்கத்தாவில் தனது சேவைப் பணியை 5 ரூபாயுடன் தான் தொடங்கினார் என்று நாணயம் வெளியீட்டு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்நிகழ்ச்சியில் பிரதீபா பாட்டீல் பேசுகையில், "அன்னை என்கிற வார்த்தைக்கு முழுமையான மற்றும் உண்மையான அர்த்தமாக விளங்கியவர் தெரசா. கடவுள் எல்லா இடத்திலும் நேரடியாக வரமுடியாது என்பதால் தான் தெரசா போன்றோரை படைத்துள்ளார்." என்றார்.
அன்னை தெரசா கொல்கத்தாவில் தனது சேவைப் பணியை 5 ரூபாயுடன் தான் தொடங்கினார் என்று நாணயம் வெளியீட்டு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment