தெரசா நூற்றாண்டு விழா போப் பெனிடிக்ட் வாழ்த்து

கோல்கட்டா : அன்னை தெரசாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, போப் பெனிடிக்ட் வாழ்த்து தெரிவித்துள்ளார். கோல்கட்டாவில் அன்னை தெரசா உருவாக்கிய மிஷினரி ஆப் சாரிட்டிக்கு போப் பெனிடிக்ட் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஆதரவற்றோர், ஏழைகள், நோயாளிகளுக்கு தொண்டாற்றிய அன்னை தெரசா, மிஷினரி ஆப் சாரிட்டிக்கு கிடைத்த விலை மதிப்பில்லாத பரிசு. தெரசா தன்னுடைய வாழ்நாளில் ஓய்வில்லாமல் உங்களுக்காக உழைத்தார். தெரசாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் நானும் பங்கு கொண்டதாக மகிழ்கிறேன்' என்றார்.
போப் பெனிடிக்ட்டின் இந்த வாழ்த்துச் செய்தியை, கோல்கட்டா ஆர்ச்பிஷப் லூகாஸ் சிர்கார், மிஷினரி ஆப் சாரிட்டியில் உள்ள தேவாலயத்தில் நேற்று படித்தார்.

 

0 comments: