92 வயது முதியவர் உடல் தானம்

நாகர்கோவில் : 92 வயது முதியவர் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்காக தனது உடலை தானம் செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குன்னத்தூரை சேர்ந்தவர் குட்டிநாடார் (92). அவர் அரசு அங்கீகாரம் பெற்ற பத்திர எழுத்தர். திருமணமாகி ஒரு மகள் உள்ளார். சுதந்திர தின விழாவை ஒட்டி நாட்டுக்கு ஏதாவது செய்ய நினைத்த இவர் தனது உடலை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் படிப்புக்காக தனது உடலை தானம் செய்ய முடிவு செய்தார். அதன்படி நாகர்கோவில் மருத்துவக்கல்லூரிக்கு சென்ற அவர் முதல்வர் மோகன்ராமிடம் தனது உடலை தானம் செய்ததற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கினார்.

 

0 comments: