கட்டாய கல்வி சட்டம் மதுரையில் 3 நாள் பயிற்சி

விருதுநகர் : தமிழகத்தில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கட்டாய கல்வி சட்டம், கல்வித்துறையில் உள்ள சட்டங்கள் குறித்து புத்தாக்க பயிற்சி, இன்று முதல் அக்., 24 வரை கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி தலைமையில் நடக்கிறது. மதுரை அழகர் கோவில் மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் பள்ளியில் இன்று துவங்கும் இப்பயிற்சியில், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், இந்த பதவிகளுக்கு இணையாக உள்ள கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களுக்கான சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், கல்வித்துறை அதிகாரிகளுக்கான பணி விதிமுறைகள், நன்னடத்தை விதிகள், கட்டாய கல்வி சட்டம், மேல்நிலைப் பள்ளிகளுக்கான சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. உண்டு உறைவிடப் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் கலந்து கொள்ளும்படி, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

0 comments: