பல்கலை தரவரிசையில் மாநில அளவில் சாதனை

ராசிபுரம்: ஞானமணி இன்ஜினியரிங் கல்லூரி மாணவி, பல்கலை தரவரிசையில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.ராசிபுரம் ஞானமணி கல்வி நிறுவனம் சார்பில் தொழில் நுட்ப கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரி, மேலாண் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகள் இயங்கி வருகிறது. தற்போது பி.இ., தொழிற் கல்வி படிப்பின் இறுதி ஆண்டு வாரியத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், இக்கல்லூரி பி.டெக்., இன்பர்மேஷன் டெக்னாலாஜி துறை மாணவி சத்யா சென்னை அண்ணா பல்கலை அளவில் மாநிலத்தில் 11வது இடம் பிடித்துள்ளார். மேலும், கோவை மண்டல இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இடையே 4வது இடமும், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தில் 6ல் 3ம் இடமும் பெற்றுள்ளார்.கல்லூரி துவங்கி முதல் பேட்ஜிலேயே இச்சாதனையை கல்லூரி நிகழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்ற மாணவி சத்யா மற்றும் சிறப்பாக பயிற்சி அளித்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோரை கல்வி நிறுவன தலைவர் அரங்கண்ணல், தாளாளர் மாலாலீனா, முதன்மை செயல் அதிகாரி விவேகானந்தன், நிர்வாக அலுவலர் பிரேம்குமார், தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் பாஸ்கரன், இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் டென்சிங் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

 

0 comments: