புதிய கண்டுபிடிப்பு: மாணவனுக்கு பாராட்டு

கரூர்: "மொபைல் டிடெக்டர்' கருவியை வடிவமைத்த பள்ளி மாணவனை, கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி பாராட்டினார்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. கரூர் சின்ன ஆண்டாங்கோவில் தெருவை சேர்ந்த குணசேகர் மகன் வசந்தகுமார். கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர். இவர் "மொபைல் டிடெக்டர்' என்னும் கருவியை வடிவமைத்து, சமீபத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தார். "மொபைல் டிடெக்டர்' கருவி முக்கிய கூட்டம் நடக்கும் இடத்தில் பொருத்திவிட்டால், எவராவது மொபைல் ஃபோன் இயக்கினால் சத்தம் எழுப்பி காண்பித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


சம்மந்தப்பட்ட மொபைல் ஃபோன் எண்ணும் தெரியும் வகை வடிவமைத்திடவும் இயலும் எனவும் விளக்கப்பட்டது. மாணவர் குணசேகரை, கலெக்டர் உமாமகேஸ்வரி சால்வை அணிவித்து பாராட்டினார். கண்டுபிடிப்பை மேலும் பயனுள்ள வகையில் விரிவு செய்ய பொறியியல் கல்லூரிக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அறிவித்தார். டி.ஆர்.ஓ., பிச்சையா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தசரத ராமசுப்பிரமணியன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

 

0 comments: