அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்சந்தேகங்களுக்கு மக்கள் விளக்கம் பெறலாம்

புதுச்சேரி:லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்.பி., ராமராஜூ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் வரும் 25ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை புதுச்சேரி அரசால் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசு துறைகளின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்க கூடத்தில் நடக்கிறது. 25ம் தேதியன்று மாலை 3 மணிக்கும், 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை காலை 10 மணிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி துவங்குகிறது.நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துகொண்டு, லஞ்ச ஒழிப்பு தொடர்பாக தங்களது ஆலோசனைகளை தெரிவிக்கலாம். மேலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தங்களது சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை பெறலாம்.வரும் 25ம் தேதியன்று குடிமைப் பொருள் வழங்கல், சமூக நலம், 26ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, 27ம் தேதி வணிக வரி, போக்குவரத்து, 28ம் தேதியன்று பொதுப்பணி, மின்சாரம், உள்ளாட்சி, 29ம் தேதி போலீஸ், நகரமைப்பு, 30ம் தேதியன்று விவசாயம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் அதிகாரிகளுடன் பொதுமக்கள் கலந்துரையாடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

0 comments: