"புத்துயிர்' பெறும் ஐ.டி., நிறுவனங்கள்

புதுடில்லி : இந்திய ஐ.டி., நிறுவனங்களில் 13 லட்சத்துக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக, இந்தியாவில் உள்ள ஐ.டி., நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தன. ஐ.டி., ஊழியர்களில் சிலருக்கு சம்பள வெட்டும், பலருக்கு வேலைவாய்ப்பும் பறிபோனது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஐ.டி., துறையில் புதிய வேலைவாய்ப்புகள் குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆய்வு நடத்தியது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடந்த இந்த ஆய்வில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் ஐ.டி., துறை மீண்டும் புத்துயிர் பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஜவுளிப் பொருட்கள், தோல், உலோகங்கள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஆபரணப் பொருட்கள் சார்ந்த உள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில், இதுவரை 13 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

 

0 comments: