புதிய கண்டுபிடிப்பைவரவேற்கும் "நிப்ட் டீ'

திருப்பூர்:தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஆக்கப்பூர்வமான புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்க, "நிப்ட் டீ' கல்லூரியில் திட்ட வடிவமைப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற புதிய கண்டுபிடிப்புகள் வரவேற்கப்படுகின்றன."நிப்ட் டீ' கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கை:குறு, சிறு மற்றும் மத்திய தொழில் அமைச்சகம், திட்ட வடிவமைப்பு மையம் என்ற புதியதொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார்ந்த ஆக்கப்பூர்வமான புதிய திட்டத்துக்கு வடிவம் அளித்தல், மக்களிடம் வர்த்தகப்படுத்துவது இதன் முக்கிய குறிக்கோள். நாடு முழுவதும் 29 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


தமிழகத்தில் கோவை வேளாண் பல்கலை மற்றும் திருப்பூர் நிப்ட் டீ கல்லூரி என இரண்டு மையங்கள்.பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோரிடம் இருந்து பின்னலாடை துறையில் ஆக்கப்பூர்வமான புதிய கண்டுபிடிப்புகள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடைய திட்டம், "நிப்ட் டீ புதிய பின்னலாடை தொழில்நுட்ப வடிவமைப்பு மையம்' என்ற பெயரின் கீழ் கொண்டு வரப்படுகிறது. பின்னலாடை தொழில்முனைவோர், கல்வியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை நிபுணர்களை கொண்டு, பிரத்யேக செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.கண்டுபிடிப்புகளை பதிவு செய்ய மற்றும் மேலும் விபரங்களுக்கு, கல்லூரி முதல்வரை அணுக வேண்டும். அல்லது 0421 - 2374 200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

0 comments: