பொதுத்துறை வங்கிகளில் 85 ஆயிரம் பேருக்கு வேலை

புதுடில்லி : பொதுத்துறை வங்கிகளில், அடுத்த மூன்றாண்டுகளில் 85 ஆயிரம் காலியிடங்கள் ஏற்படவுள்ளன. இந்த இடங்களுக்கு தகுதியான நபர்கள், தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என அரசு தெரிவித்துள்ளது.


மத்திய நிதியமைச்சகம் சார்பில் பொருளாதார ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது, அரசு தரப்பில் பொதுத்துறை வங்கிகள் வேலைவாய்ப்பு பற்றி தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுத் துறை வங்கிகளில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், 2010-13ம் ஆண்டிற்குள், 34 ஆயிரம் அதிகாரிகளும், 52 ஆயிரம் கிளார்க்குகளும் தேர்வு செய்யப்பட உள்ளனர். "வங்கி ஆட் தேர்வு மையம்' (ஐ.பி.பி.எஸ்.,) மூலம் வெளிப்படையான முறையிலும், வேகமாகவும் தேர்வு செய்யப்படுவர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை வங்கிகளுக்கான தேர்வு முறைகள் மூலம் ஐ.பி.பி.எஸ்., ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. 1984ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஐ.பி.பி.எஸ்., நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கான ஆட்தேர்வு உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. கடந்த 2009-10ம் ஆண்டில் நாடு முழுவதும் ஐ.பி.பி.எஸ்., மூலம் நடத்தப்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கான ஆட்தேர்வில், 60 லட்சம் விண்ணப்பதாரர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

0 comments: