ஆசிரியர் காலிப்பணியிடங்கள் டிச.,க்குள் நிரப்ப நடவடிக்கை

விருதுநகர் : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ளதால், ஆசிரியர் காலிப் பணியிடங்களை டிசம்பருக்குள் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த பின், புதிய பணி நியமனம் செய்ய முடியாது. இதனால், காலியாகவுள்ள 1,766 இடைநிலை ஆசிரியர் பணியிடம், 5,050 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுதவிர, 900 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 341 சத்துணவு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் மூலம், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தமிழாசிரியர்கள் 346 பேர், ஆங்கிலம் 385, கணிதம் 684, இயற்பியல் 452, வேதியியல் 456, தாவரவியல் 194, விலங்கியல் 194, வரலாறு 165, புவியியல் ஆசிரியர்கள் 17 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

 

0 comments: