இலவச ஓவியப்போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் இலவச ஓவியப்போட்டி நடத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்ட் டெக்னாலஜி, கலை வளர்ச்சிக்கான அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, "ஒவ்வொரு மாணவனுக்கும் ஓவியம்' திட்டத்தின் கீழ் இலவச ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 2,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஒன்றாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் இலவச ஓவிய போட்டியில் பங்கு பெறலாம். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு "எனது வீடும் தோட்டமும்' என்ற தலைப்பிலும், நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு "கேலிச்சித்திரங்கள்' என்ற தலைப்பிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு "காடுகளில் விலங்குகளில்' என்ற தலைப்பிலும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு "புவி வெப்பமயமாதல்' என்ற தலைப்பிலும் ஓவியம் வரைய வேண்டும்.


ஓவிய போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 25 முதல் 50 மாணவர்கள் வரை தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டியில் பங்கு பெற விருப்பம் உள்ளவர் "செயலாளர், இண்டியன் இன்ஸ்டியூட் ஆஃப் ஆர்ட் டெக்னாலஜி, 12/8, ஏரித்தெரு, எஸ்.பி.எஸ்., மருத்துவமனை எதிரில், ஓசூர்' என்ற முகவரிக்கு நவம்பர் 4ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். சந்தேகத்துக்கு 94887 62718 என்ற மொபைல்ஃபோனை தொடர்பு கொள்ளவும். இத்தகவலை இந்தியன் இன்ஸ்டிடியூட் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

 

0 comments: