துபாயில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

மதுரை : துபாயில் ஓட்டல்கள், அலுவலகங்களில் பணியாற்ற பராமரிப்பு பணியாளர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இந்தி அல்லது ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது 30க்குள் இருக்க வேண்டும். நிறைவான சம்பளம், இலவச தங்குமிடம், மிகைநேர பணிக்கு சம்பளம், துபாய் நாட்டின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், போட்டோக்களுடன் விண்ணப்பங்களை, "48, டாக்டர் முத்துலட்சுமி ரோடு, அடையாறு, சென்னை- 600 020' என்ற முகவரியில் உள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கலாம். இதுதொடர்பான விபரங்களை அறிய, 244 64269, 244 64278ல் தொடர்பு கொண்டு அறியலாம்.

 

0 comments: