ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம், யுனிசெஃப் நிறுவனம் சார்பில் ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட்டது.


தர்மபுரி வட்டார வள மையத்துக்கு உட்பட்ட 263 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆறு கட்டமாக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியாளர்கள் ரதி, நக்கீரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சவேரியம்மாள் துவக்கி வைத்தார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் குருநாதன், உதவி திட்ட அலுவலர் சுகுமார் ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டனர்.


ஆசிரியர்கள் தங்கள் ஆங்கில புலமை வளர்த்து கொள்ளுதல், பள்ளிகளில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கற்றல், கற்பித்தலை முறைப்படுத்தல் குறித்து பயிற்சியில் விளக்கப்பட்டன. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கதிர் செய்திருந்தார்.

 

0 comments: