இளைஞர்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் நாடு வலிமை பெறும்

காந்திகிராமம் : இளைஞர்கள் ஆற்றல், லேசர் கதிர்களை போன்ற வலிமை மிகுந்தது. இதனை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் குடும்பம், சமுதாயம் , தேசம் என அனைத்து தரப்பிற்கும் நன்மை ஏற்படும் என காந்திகிராம பல்கலை., பதிவாளர் (பொறுப்பு) சிவராமன் பேசினார்.காந்திகிராம பல்கலை., இடாரா மையத்தில் சமுதாய திட்டங்களின் செயலாக்கத்திற்கு இளைஞர்களின் திறனை மேம்படுத்துதல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. திட்ட அதிகாரி முத்துச்சாமி வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட நேரு யுவகேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.


பயிற்சியை துவக்கி வைத்து பல்கலை., பதிவாளர்(பொறுப்பு) சிவராமன் பேசும்போது, "நமது நாட்டில் இளையோர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. வல்லரசு என்ற லட்சியத்தை அடைவதற்கு இளைஞர்களின் கடின உழைப்பும் முயற்சியும் அவசியம். தன்னம்பிக்கை, குறிக்கோள், திறமை இவற் றை வளர்த்து கொண்டு, குறிப்பிட்ட இலக்கை அடையவேண்டும் என்ற லட்சியத்துடன் இளைஞர்கள் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறமுடியும். இளைஞர்களின் ஆற்றல் லேசர் கதிர்களை போன்ற வலிமை மிகுந்தது. இதனை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் குடும்பம், சமுதாயம், தேசம் உள்ளிட்ட அனைத்து தரப்பிற்கும் நன்மை ஏற்படும்' என்றார். இடாரா இயக்குநர் பாலுச்சாமி, செம்பட்டி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஆனந்த், தொழில்நுட்ப வல்லுநர் பிரிட்டோ உட்பட பலர் பேசினர். ஆராய்ச்சி உதவியாளர் இங்கர்சால் நன்றி கூறினார்.

 

0 comments: