சத்தம்போடாமல் அடிவாங்குங்கள்-வாசகர் கட்டுரை

என்.நடராஜன்.

வேற்று கலாசாரத்தில் கால் வைக்கும் போது

உலகெங்கிலும், காலம் காலமாக மனிதர்களும் மற்ற உயிரினங்களும், வளமையைத் தேடி இடம் பெயர்வது புதியதில்லை. இதன் அடிப்படையில் மக்கள் வேற்று கலாசாரங்களுக்கும் கால் வைப்பதும் புதிய செயல் இல்லை.
நீங்கள் எப்போதாவது அடுப்பங்கரையில் மனைவிக்கோ அல்லது அம்மாவுக்கு பஜ்ஜி போட உதவியிருந்தால் வேற்றுகலாசாரதில் வழக்கமாக நிகழும் ஆபத்து புரிந்துவிடும்.
   வேற்று கலாசாரத்தில் வளமைத் தேடி ஊடுருவும் மக்கள் தண்ணீரப் போலவும், உள்ளூர் சமுதாயத்தை எண்ணை காயும் கொப்பரையாகவும் கற்பனை செய்து கொள்ளலாம். காயும் எண்ணை, தண்ணீர் இரண்டும் கலக்கும் போது கொதிக்கும் எண்ணை வெடித்துச் சிதறிவிடும் இல்லையா.
  இது சாதாரண, பொருளாதாரப் பிரச்சினை. கலாச்சாரத்தில் இணைந்த புதியவர்கள் உள்ளவர்களின் வாழ்விற்கு அச்சமுறுத்தும் வகையில் அமையக்கூடாது. படிக்க போன்னால் படித்துவிட்டு ஊர் திரும்பினால் பிரச்சனை இருக்காது. படிக்கப் போகிறேன் என்ற போர்வையில் சமுதாயத்தில் உள்ள கீழ்மட்ட வேலைகளை, குறைந்த சம்பளத்தில் பிடித்துக்கொள்ளும்போது எண்ணை சூடாகி வெடிக்கிறது!
  இந்த மொழி-இனக்கலப்பில் கை கலப்பு உருவாகமல் இருக்க மிகவும் அவசியம், எச்சரிக்கை. இதை நமது கல்வித் திட்டத்தில் பல கட்டத்தில் ஒரு பாடமாக இது அமையவேண்டும் என்பது எனது கணிப்பு.
சில உண்மை நிகழ்ச்சிகள்:
   சமீப காலமாக கிரிக்கெட் ஆட்டத்தைதவிர ஆஸ்திரேலியாவைப் பற்றிய செய்திகள் டீ வி யில் நிறையவே வருகின்றன. அதன் பின்னணி என்ன? இந்திய மாணவர்கள் மீது பல கொலை வெறி தாக்குதல்கள். முதலில் மறுத்த ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அனைவரும் இதை எல்லா நாடுகளிலும் தவிர்க்க முடியாத திருடர்கள் மற்றும் விடலைச் சிருவர்களின் வேலையாக விளக்கி வந்தார்கள். நம்ம ஊர் அரசியல்வாதிகள் இதை இனக்கலவரம் என்று வருணித்தார்கள். உண்மை இது இரண்டுமே இல்லை.
இதை ஆஸ்திரேலியா தடுக்கவேண்டும். குற்றம் செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூச்சலிட்டார்கள். டீ.வி சானல்களுக்கு ஏக கொண்டாட்டம். திரும்பத்திரும்ப நாள் முழுவதும் கிடத்த விசுவல்களைப் போட்டு, ஆஸ்திரேலிய அரசாங்கத்தை, விளாசினார்கள். எதுவும் நிற்பதில்லை. இதுவும் நிற்காது.
    நல்ல வேளையாக, ஆஸ்திரேலிய அரசு, அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கைகள், இன்று வரை முக்கியமான ஒரு கேள்வியை நம் அரசிடம் எழுப்பவில்லை. மும்பாயில் மொழியின் அடிப்படையில் ஒரு அமைப்பு. இவர்கள் டெலிவிசன் கேமிரா முன்னிலையில் இந்தி பேசும் மக்களை அடித்து அவர்கள் சொத்துகளை நாசம் செய்துவருவது எல்லா டீ வி சானல்களிலும் வெளிவந்ததே!
இந்த காட்டுமிராண்டித் தனத்தை - இந்தியர் மற்ற இந்தியர் மீது நடத்திய அத்துமீரல்களை எப்படி இந்திய அரசு நிறுத்தும்? இதுவரை எத்தனை குண்டர்கள் சிறையில் அடக்கப்பட்டுள்ளார்கள் ?
சுமார் 50 வருடம் முன்னால் தென்னிந்தியர்களை எதிர்த்து வெறியாட்டம் நிகழ்த்திய அதே அமைப்பு பல கட்சிகள் ஆட்சியில் வந்து போனாலும் விடாமல் வளர்ந்து வருகிறது.
    அமெரிக்கவிலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் குறைவில்லை. தமிழ் நாட்டைவிட ஆந்திர மக்களே அதிகமாக மாணவர்களை அமெரிக்கா அனுப்புவதால் நம்மை அங்குள்ள நிகழ்வுகள் வாட்டுவதில்லை. ஆஸ்திரேலியாவில் மாணவர்கள் (பெரும்பாலும் வட இந்திய மாணவர்கள் அடி-உதை பட்ட போது ஆந்திர மாணவர்கள் கொலையுண்ட கதைகளுக்கு குறைவில்லை. அமெரிக்காவில் பெரும்பாலும் இந்த நிகழ்ச்சிகள் வேலையில்லா இளைஞர்கள் குடிகாரர்கள் என்று சிறு கூட்டம் செய்யும் வேலை. இவர்களைச் சிறைப் பறவைகள் என்று அழைப்பார்கள். உள்ளூர்காரர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். ஊருக்குப் புதியவர்கள் அகப்பட்டுக்கொள்வார்கள்.
   ஒரு சினிமா. மிகப் பழையது. ……X என்பது சினிமாவின் பெயர். அதில் புதியதாக அமெரிக்காவிற்கு குடிபுகும் மக்களுக்கு எதிராக புரட்சி. ரகசிய தாக்குதல். இவர்கள் ஜெர்மெனியில் யூதர்களை படு கொலை செய்த நாஜிகளின் கொடியும் சித்தாந்தமும்தான் வழிக்காட்டுதல்கள்.
அதில் ஒரு வசனம். பல வருடங்களுக்காக அமெரிக்க சமுதாயத்தை உயர்த்த உழைத்தவர்கள் ஏழ்மையில் இருக்கும்போது, புதியதாகப் புகுந்தவர்கள் அதிவேகமாக செல்வந்தராகிறார்கள் என்பதே.
அடுத்ததாக:
  கேரள மக்கள் வளைகுடா நாடுகளுக்கு தங்கள் இலக்கை வைத்திருப்பதைப்போல, ஆந்திரா, மற்றும் தமிழர் அமெரிக்காவை தன் இலக்காக கொண்டதைப்போல, வட ந்தியர்கள் ஐரோப்பா கனடா மற்றும் ஆஸ்திரேலியாவை அடைவதை குறிக்கோளாக கொண்டவர்கள்.
வெளி நாட்டில் உயர்கல்வி என்ற பெயரில் இப்படிப்பட்ட நாடுகளில் புகுந்து சிறிய வேலைகளில் சேர்ந்து அந்த நாட்டின் குடியுரிமை பெருவது இவர்களில் சிலரின் வழக்கம்.
  அதெல்லமல், இவர்கள் அந்த நாடுக்ளை அடைய செய்யும் முயற்சி மிக ஆபத்தானது. இரு நாடுகளிடியே வியாபார பரிவர்தனைகளுக்கு மிகப் பெரிய லாரிகள் சென்றுவரும். லாரிகளின் வெளிச்சுவர்கள் மிகச்சிறிய இடைவழி விட்டு கட்டப்பட்டிருக்கும்.
   இரண்டு மூன்று நாட்கள் அந்த இடைவெளியில் தாங்க முடியாத குளிர் அல்லது வெப்பத்தில் சவாரி செய்வர்கள் பலர். இப்படி சவாரி செய்து பிற நாடுகளை அடைய முயற்சி செய்யும் மக்களில் பலர் மனிதர்களாக சென்று, பிணங்களாக சேர்பவர்கள். அப்படியும் உயிருடன் சேர்ந்தாலு, அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைபட்டவர் அனேகர். திரும்பவும் தாய் நாட்டிற்கு திரும்பியவரும் குறைவில்லை.

  அடுத்ததாக, ஒரு மிகப்பழைய சம்பவம். ஜெர்மெனியில் யூதர்கள் சில லட்சம் பேர் படு கொலை செய்யப்பட்டார்கள். உலகம் முழுவதும் இதை கண்டித்தது. மனிதாபிமான ரீதியில் அது சரியானது. போருளாதார ரீதியில் இல்லை.
நான் எழுதுவது ஏதோ நான் ஹிட்லரின் வம்சாவளி என்றும் அதனால்தான் நாம் இப்படி எழுதுகிறேன் என்று என்னை குற்றம் சொல்லலாம்.
யூதர்களில் உலகிலேயே அதிக சக்தி பொருந்திய ஒரு இனம். கடந்த பல நூற்றாண்டுகளாக அவர்கள் அடைந்த புகழும், அவர்கள் பட்ட (படுகின்ற) துயரும் மிக மிக அதிகம்.
  அவர்களுடைய சக்தி:
அறிவுச் செரிவுள்ளவர்கள். வியாபாரத்தில், விஞ்ஞானத்தில் அவர்களுக்கு நிகர் இன்று உலகில் எவரும் இல்லை. அமெரிக்கா இவர்களுக்கு ஜாலரா போடக் காரணம் அமெரிகாவின் பெரும்பான்மை வர்தகம் இவர்கள் கையில் இருப்பதே என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.
உலகில் பல கலாசாரங்களில் கலந்திருந்து பல நூற்றாண்டுகளுக்குப்பிறகு இவர்கள் இன்று இஸ்ரேலில் குவிந்து குடியேறியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பல கலாச்சாரங்களின் தாக்கம் கொண்டிருந்தாலும் ஒற்றுமையாக செயல்பட தேவையான இணக்கம் இந்த மக்களுக்கு இருக்கிறது.
அவர்களின் துயாரம்
இவர்களைப் பூண்டோடு அழிக்க பல அரபு நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. உத்தேசமாக சொன்னால், நம்மைச் சுற்றி 100 பாக்கிஸ்தான் இருப்பதற்கு சமம். சிக்கனமானவர்கள். அதே சமயம் எந்த சமுதாயத்தில் இருக்கிறார்களோ அங்குள்ள பொருளாதாரம் இவர்கள் கைக்கு மாறிவிடும்.
ஆழ்ந்து சிந்தித்தால், ஜெர்மெனியில் இவர்கள் மீது வெறுப்புவருவதற்கு, இவர்களை பூண்டோடு அழிக்கக் காரணமானது, இவர்கள் வெற்றி. இவர்களுடய வெற்றி இவர்கள் கலந்த சமுதாயத்தை தோல்வியில் ஆழ்த்தியதே.

படிப்பினைகள்

(1) சுருக்கமாக இதன் படிப்பினை, வளமையைத்தேடி செல்லும் மக்கள் புதிய சமுதாயத்தை முற்றிலும் கலந்திட வேண்டும். புதிய சமுதாயத்தில் சமுதயத்தையும் உயரவைத்து அத்துடன் தானும் உயரலாம். விருந்தாளிகைப் போல வாழ்ந்து வந்து மற்றவருடன் ஒன்றரக் கலந்துவிட வேண்டும்.
(2) தான் இந்த இனத்தைச் சேர்ந்தவன் என்று பறை சாத்தும் வகையில் மற்ற தன் இனத்தவருடன் இணைந்து கூத்தடுவது அழிவுக்கு விரைவுவழியைத் தேடுவதாகும்.
(3) இனப்பற்று மொழிப்பற்று மதப்பற்று என்று உங்களை பல பற்றுகள் தொல்லை செய்யுமானால், வளமையின் மீதுள்ள பற்றை பற்றவைத்துவிட்டு உங்கள் இயல்பான சமுதாயத்திற்கே திரும்பி, திருப்தியாக வாழுங்கள்.
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை – அப்படியானால், மை டியர் மக்களே, சத்தம்போடாமல் அடிவாங்குங்கள்

என்னுடன் தொடர்பு கொள்ள
௦080- 41212349
09686037729
பெங்களூரு

 

0 comments: