யோகா செய்தால் மன அழுத்தம் குறையும் - ஆய்வுத் தகவல்.

ஆமதாபாத் : யோகா செய்வதால் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், ஆதித்ய பிர்லாவின் "கிராசிம்' ஜவுளி நிறுவன அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு யோகா மற்றும் உடற்பயிற்சி மற்றும் தத்துவம் பயிற்றுவிக்கப்பட்டது. 84 பேரில் 42 பேருக்கு யோகா பயிற்றுவிக்கப்பட்டது. மற்ற 42 பேருக்கு உடற்பயிற்சியும் தத்துவமும் மொத்தம் 30 மணி நேரம் போதிக்கப்பட்டன. தினமும் 75 நிமிடங்கள் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பயிற்சி முடித்த பின் இவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. யோகா பயிற்சி மேற்கொண்ட அதிகாரிகளிடம் மன அழுத்தம் நீங்கியிருந்தது. உடற்பயிற்சியும், தத்துவமும் பயின்ற அதிகாரிகளிடம் வழக்கத்துக்கு மாறாக பதட்டமும், மன அழுத்தமும் அதிகரித்திருந்தது.

 

0 comments: