உலக அளவிலான கராத்தே போட்டி தமிழக வீரர்கள் பங்கேற்பு

சேலம்: செர்பியாவில் உள்ள பெல்கிரேடில் 20வது உலக சீனியர் கராத்தே போட்டி நேற்று துவங்கியது. இதில் அகில இந்திய கராத்தே சம்மேளன தலைவர் சென்சாய் கராத்தே தியாகராஜன் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது. அகில இந்திய ரியோசின்கான் சிட்டோரியோ கராத்தே பள்ளியைச் சேர்ந்த ஆந்திரா கீர்த்தன், ஒரிஸா வெலினா வாலன்டினா ஆகியோர் பங்கேற்கின்றனர். உலக கராத்தே போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் விவரம் : ஆண்கள்: அம்பர்சிங் பரத்வாஜ் (சட்டீஷ்கர்), சவுரவ் சிந்தியா, விகாஷ் சர்மா (மத்திய பிரதேசம்), சபரி கார்த்திக் (தமிழ்நாடு), சுனில்ரதி (ஹரியானா), கீர்த்தன் (ஆந்திரா), சபவாலா, படகாலா, மேத்தா(மஹாராஷ்டிரா). வீராங்கனைகள் : சுமித்ரா (தமிழ்நாடு), வெலினா வாலன்டினா(ஒரிஸா), லின்சா பென்னி (மேகாலயா), சிமிபட்டா (பஞ்சாப்), சுரேவ்(ஆந்திரா), காட்போலே, ஜலால் நடாலியா ராய்மொனாலி( மஹாராஷ்டிரா). இந்திய அணி மேலாளராக பரத்சர்மா (டில்லி), பயிற்சியாளர்களாக கனகராஜ் (தமிழ்நாடு), கபாடியா (மஹாராஷ்டிரா) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட தகவலை இந்திய ரியோசின்கான் சிட்டோரியோ மாஸ்டர் கலைமணி, சேலம் மாவட்ட தலைவர் சீனிவாசன், செயலாளர் செந்தில் ஆகியோர் தெரிவித்தனர்.

 

0 comments: