மாணவர் சேர்க்கை : அவகாசம் நீட்டிப்பு

சென்னை : அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மைய மாணவர் சேர்க்கை, நவம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மைய படிப்புகளின் 2010 - 11ம் ஆண்டு மாணவர் சேர்க்கை நவம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.எஸ்சி., (உளவியல், வழிகாட்டுதல் ஆலோசலை நல்குதல், கணிதம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை) எம்.பி.ஏ., - எம்.ஏ., (ஆங்கிலம், தமிழ், மகளிரியல், இசை, வணிகவியல், கணினி பயன்பாடு, கல்வியியல், வரலாறு, சமூகவியல், பொதுநிர்வாகம்) ஆகிய முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. பி.பி.ஏ., (வணிக மேலாண்மை), பி.ஏ., (இசை, சமூகவியல், வரலாறு, தமிழ், ஆங்கிலம், மகளிரியல்), பி.எஸ்சி., (உளவியல், கணிதம், ஹோட்டல் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம்), பி.காம்., - பி.சி.ஏ., மற்றும் முதுநிலை பட்டயப்படிப்புகள், பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு, பல்கலையின் இயக்குனரை 04542-241921, 044-24347222, 24358216, 0452-2387345 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

0 comments: