மன நலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: கலெக்டர்

கடலூர் : குழந்தைகளின் உடல் நலன் குறித்து தொண்டு நிறுவனங்கள் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கலெக்டர் கேட்டுக் கொண்டார். கடலூர் புதுப்பாளையத்தில் தமிழக அரசின் நிதி உதவியுடன் ஒயாசீஸ் கருணா மன நலம் பாதிக் கப்பட்டோர்களுக்கான மறுவாழ்வு மையம் துவக்க விழா நடந்தது. ஒயாசீஸ் தொண்டு நிறுவன இயக்குனர் தவராஜ் வரவேற்றார். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். கடலூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், மனநல டாக்டர் சத்தியமூர்த்தி, வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட திட்ட மேலாளர் நித்தியானந்தம், என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம் உட்பட பலர் பங்கேற் றனர்.


விழாவில் அரசு அங்கீகாரம் பெற்ற 6 மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சத்து 5 ஆயிரம் வீதம் 6.30 லட்சத்திற்கான காசோலையை வழங்கி கலெக் டர் சீத்தாராமன் பேசுகையில், "நாட்டில் இது போன்ற மையங்கள் இனி துவங்கப்படாமல் இருக்க மன, உடல் நலம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற சூழல் ஏற்படாமல் இருக்க சமூக பொறுப்பு மக்களிடையே ஏற்பட அனைத்து தரப்பினரும் உழைக்க வேண்டும். இந்த மையத்தில் உள்ள குழந்தைகள் மன நலம் பெற்று பூரண குணமடைய வேண்டும்' என பேசினார்.

 

0 comments: