ஆசிரியர் கல்வியில் துணைத் தேர்வு

சென்னை : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக துணைத் தேர்வுக்கு, நவம்பர் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 633 கல்வியியல் கல்லூரிகளுக்கான பி.எட்., மற்றும் எம்.எட்., மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இம்மாதம் 27ம் தேதி வெளியானது. தேர்வில் தவறியவர்கள், டிசம்பரில் நடக்கவுள்ள துணைத் தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை, அவர்கள் பயின்ற கல்லூரிகளின் முதல்வரிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கல்லூரி முதல்வர்கள் வழியாக, நவம்பர் 9ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அபராதக் கட்டணத்துடன் அனுப்ப நவம்பர் 19ம் தேதி இறுதி நாள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

0 comments: