தகுதி அடிப்படையில் ஆட்சேர்ப்பு : இந்திய விமானத்துறை எச்சரிக்கை

திண்டுக்கல் : ஆட்தேர்வு தகுதி அடிப்படையில் நடக்கிறது. ஏஜன்ட்களை நம்பி ஏமாற வேண்டாம் என இந்திய விமானப்படை எச்சரித்துள்ளது.

விமானப்படையில் சேர்வதற்கான ஆட்தேர்வு 2011 பிப்ரவரியில் நடக்கிறது. 01.4.90 முதல் 31.05.94க்குள் பிறந்தவர்கள் நவ. 8க்குள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 (கணிதம் மற்றும் இயற்பியல்)அல்லது பாலிடெக்னிக் தேர்வில் 50 சதவீத மார்க் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விபரத்திற்கு 8, ஏர்மென் செலக்சன் சென்டர், ஏர்போர்ஸ் ஸ்டேஷன், தாம்பரம், சென்னை(போன்:044-2279 1853) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். எச்சரிக்கை: தேர்வு இலவசமாகவும், நேர்மையாகவும் தகுதி அடிப்படையில் மட்டுமே நடக்கும். எந்த நிலையிலும் யாருக்கும் பணம் தர வேண்டாம். ஏஜன்ட்கள் என யாரையும் நம்பி ஏமாற்றத்திற்கும் தேவையற்ற ஒழுங்கு நடவடிக்கைக்கும் ஆளாகாதீர்கள். இந்திய விமானப்படை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

0 comments: