தகுதி அடிப்படையில் ஆட்சேர்ப்பு : இந்திய விமானத்துறை எச்சரிக்கை
திண்டுக்கல் : ஆட்தேர்வு தகுதி அடிப்படையில் நடக்கிறது. ஏஜன்ட்களை நம்பி ஏமாற வேண்டாம் என இந்திய விமானப்படை எச்சரித்துள்ளது.
விமானப்படையில் சேர்வதற்கான ஆட்தேர்வு 2011 பிப்ரவரியில் நடக்கிறது. 01.4.90 முதல் 31.05.94க்குள் பிறந்தவர்கள் நவ. 8க்குள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 (கணிதம் மற்றும் இயற்பியல்)அல்லது பாலிடெக்னிக் தேர்வில் 50 சதவீத மார்க் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விபரத்திற்கு 8, ஏர்மென் செலக்சன் சென்டர், ஏர்போர்ஸ் ஸ்டேஷன், தாம்பரம், சென்னை(போன்:044-2279 1853) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். எச்சரிக்கை: தேர்வு இலவசமாகவும், நேர்மையாகவும் தகுதி அடிப்படையில் மட்டுமே நடக்கும். எந்த நிலையிலும் யாருக்கும் பணம் தர வேண்டாம். ஏஜன்ட்கள் என யாரையும் நம்பி ஏமாற்றத்திற்கும் தேவையற்ற ஒழுங்கு நடவடிக்கைக்கும் ஆளாகாதீர்கள். இந்திய விமானப்படை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment