சர்க்கரை நோய்க்கு புதிய மருந்து மருத்துவக் கருத்தரங்கில் தகவல்

கம்பம்: சர்க்கரை நோயாளிக்கு சாப்பிடும் போது மட்டும் கொடுப்பதற்கு புதிய மருந்து ஒன்று இருப்பதாக மருத்துவ கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. இந்திய மருத்துவ சங்க முல்லைப்பெரியாறு கிளை சார்பில் மருத்துவ கருத்தரங்கு கம்பத்தில் நடந்தது. கிளை தலைவர் மோகன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் மணிமோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். "சர்க்கரை நோய்க்கு புதிய சிகிச்சை முறைகள்' என்ற தலைப்பில் மதுரை சர்க்கரை நோய் டாக்டர் கோவிந்தராஜ் பேசியதாவது: இந்தியாவில் 5 பேர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மருந்து, பயிற்சி, உணவு கட்டுப்பாடு, விழிப்புணர்வு, சர்க்கரையின் அளவை அடிக்கடி கண்காணித்தல் என்ற அடிப்படையில் சிகிச்சை செய்ய வேண்டும். இந்த நோய்க்கு "புரோமே கிருப்டின்' என்ற புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் கடைகளில் கிடைக்கும். தற்போது "விட்டா கிளிப்டின்' என்ற மருந்து வரப்பிரசாதமாகும். உணவு சாப்பிடும் போது மட்டும் இந்த மருந்து சாப்பிட்டால் போதும். பிற நேரங்களில் தேவையில்லை என்றார். சக கிளை பொருளாளர் அக்னிராஜ் நன்றி கூறினார்.

 

0 comments: