எதிர்காலத்தில் "ரோபோ' பங்கு முக்கியமானதாக இருக்கும் : நடராஜன்

http://img.dinamalar.com/data/large/large_115870.jpg

ஆவடி : ""எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும், ரோபோக்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்,'' என, ராணுவ அமைச்சகத்தின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் நடராஜன் பேசினார். மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் சார்பாக, "ஸ்டூண்ட்ஸ் ரோபோ-2010' போட்டி துவக்க விழா, ஆவடி, போர் ஊர்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடந்தது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராணுவ அமைச்சக, முன்னாள் அறிவியல் ஆலோசகர் நடராஜன் பேசுகையில், "பாதுகாப்புத் துறையில் ஆட்கள் இல்லாமல் இயங்கும் போர் வாகனங்களுக்கு, ரோபோக்களின் பங்களிப்பு உதவும். எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் ரோபோக்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும்' என்றார்.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி சுந்தரேஷ், போட்டியை துவக்கி வைத்து பேசுகையில், "மாணவர்களுக்கு, இதுபோன்ற போட்டிகள் வைப்பதன் மூலம், அவர்களது அறியவியல் தொழில்நுட்பத்தை, ராணுவத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக, பல்வேறு கல்லூரிகளுடன், நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வருகிறோம்' என்றார்.

விழாவில், சி.வி.ஆர்.டி.இ., இயக்குனர் சிவகுமார், கூடுல் இயக்குனர் ஜெயஸ்ரீ வரதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சென்னை அண்ணா பல்கலைக் கழகம், ஐ.ஐ.டி., - எஸ்.ஆர்.எம்., பல்கலை உள்ளிட்ட, 14 கல்லூரி மாணவர்கள் தங்களது படைப்புகளை வைத்துள்ளனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நாளை பரிசுகள் வழங்கப்படும்.

 

0 comments: